பட்டம் விடும் மாஞ்சா'வால் கண்மணிக்கு ஏற்பட்ட காயம்

மக்களே,

மூன்று நாட்களாக ஊரில் இல்லை. ஹைதரபாத் பிரியாணி சாப்பிட்டுவிட்டு இப்போது தான் திரும்பினேன். இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த ஒரு துக்க சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

உங்களில் பலருக்கு கண்மணியை தெரிந்து இருக்கும். சென்னையில் இருப்பவர்களில் கண்மணியை தெரியாதவர்கள் கண்டிப்பாக காது கேட்காதவர்களாகவே இருக்க வாய்ப்பு. ஆம், சென்னையின் நம்பர் ஒன் ரேடியோஜாக்கி யார் என்றால் பலரும் ஆண்களில் தீனாவையும் பெண்களில் கண்மண்யையும்/சுசித்ராவையும் தேர்ந்தெடுப்பார்கள். அதில் இந்த சுசித்ரா பல தொலைக்கட்சிகளில் வருவதாலும் / வாழ்க்கை முறையாலும் பலராலும் அறியப்பட்டாலும் கூட சிறப்பான இனிமையான குரல்வளம் கொண்ட ரேடியோஜாக்கி என்று மட்டும் பார்த்தால் கண்மணி தான் வெற்றிபெறுவார்கள்.

மற்றபடி சென்னையில் வசிக்காத தமிழர்களுக்காக இதோ இந்த தகவல்: நீங்கள் திருட்டு பயலே படத்தில் வரும் பொய் சொல்லப் போறேன் பாடலை கண்டிப்பாக கேட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த இனிமையான பெண் குரலுக்கு சொந்தக்காரர் நம்முடைய கண்மணிதான்.

 

என்ன பாடலை கேட்டு விட்டீர்களா? அருமையான குரலுக்கு சொந்தக்காரர் நம்முடைய கண்மணி என்பதில் இனிமேலும் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது அல்லவா? இனிமேல் நடந்த சம்பவத்திற்கு வருவோம். கடந்த திங்கள் கிழமை அன்று (15-02-2010) அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டு இருந்த கண்மணி அவர்கள் திடீரென்று கழுத்தை ஏதோ ஒன்று அறுப்பது போல வலி ஏற்படுத்த, உடனே வண்டியை நிறுத்த முயன்றார்கள். மாலை நான்கு மணி என்பதால் நல்ல சூரியவெளிச்சத்தில் கழுத்தில் இருந்து ரத்தம் வருவதையும், தாங்க முடியாத வலி ஏற்பட்டதையும் பார்த்த கண்மணிக்கு சிறிது நேரம் கழித்தே தன்னுடைய கழுத்தில் பட்டம் விடும் மாஞ்சா கயிற்றின் வலியை உணர முடிந்தது.

RJ Kanmani

அதன் பின்னர் உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனையில் சென்று அட்மிட் ஆகிவிட்டார்கள். கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கண்மணிக்கு மொத்தம் 24 தையல்கள் போடப்பட்டனவாம், அதுவும் கழுத்தில். இன்று காலை கண்மணி அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொதுவான சிகிச்சை பிரிவுக்கு மாற்றப் பட்டார்கள். உயிருக்கும், குரலுக்கும் (இவரை பொறுத்த வரையில் குரலானது உயிரை விட முக்கியம்) இப்போதைக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் கூறி விட்டனர்.

இந்த விபத்தினை பற்றி பல்வேறு செய்தித்தாள்களில் வந்த விவரங்கள் :(படிக்க, அந்த பத்திரிக்கையின் பெயரை கிளிக் செய்யுங்கள்)

விரைவில் கண்மணி உடல்வளமும், குரல்வளமும் பெற்று மறுபடியும் தன்னுடைய இனிமையான குரல் மூலம் நம்மையெல்லாம் மகிழ்விக்க எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுவதோடில்லாமல் இப்படி வாகன போக்குவரத்து நிறைந்த சாலைகளில் சட்டவிரோதமாக மாஞ்சா பட்டம் விடும் நபர்களை கடுமையாக தண்டிக்க காவல்துறைக்கு வேண்டுகோளையும் வைக்கிறோம்.

சென்னை பீச்சில் கிரிக்கெட் விளையாடுவதை தடை செய்த அரசாங்கம், சென்னை நகர சாலைகளில் மாஞ்சா மூலம் பட்டம் விடுவது தண்டிக்கபடக்கூடிய குற்றம் என்று தெரிந்தும் அந்த ஆபத்தான விளையாட்டில் ஈடுபடும் நபர்களை என்ன செய்யப் போகிறது?

மணப்பாறை முறுக்கு - ஒரு நேரடி ரிப்போர்ட்

மக்களே,

சென்றவாரம் நான் மறுபடியும் ஒரு சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். இந்த முறை நான் பயணித்த பகுதி - திண்டுக்கல். ஆம், திண்டுக்கல் தான். உடனே, இந்த பதிவு என்ன பூட்டு பற்றியா என்று கேட்காதீர்கள். இந்த பதிவில் திண்டுக்கல் செல்லும் வழியில் இருந்த மணப்பாறை பற்றியும் அந்த ஊருக்கே ஸ்பெஷலான முறுக்கு பற்றியும் தான்.

திண்டுக்கல் பூட்டு பற்றிய பதிவினை விரைவில் காணலாம். அல்லது திண்டுக்கல்லில் இருக்கும் சில பல பிரபலமான முக்கியஸ்தர்களை  பற்றியும் உங்களுக்கு விவரங்கள் வேண்டுமெனில் தெரிவிக்கவும் - அதனையும் பதிவாக இட்டு விடலாம்.

இந்த பத்தி தமிழகத்தை சாராத அல்லது இதுவரை திருச்சி பகுதிக்கு பயணிக்காத வாசகர்களுக்காக:Manapparai Map மணப்பாறை என்பது திருச்சி நகரில் இருந்து சுமார் 46 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அதாவது, திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் மணப்பாறை வரும். என்னை போல காரில் பயணிக்கும் வாசகர்கள் கவனிக்க வேண்டியது என்னவெனில் நீங்கள் பை-பாஸ் ரோடில் சென்றால் இந்த ஊருக்குள் செல்ல இயலாது. ஆம், ஊருக்கு செல்ல நீங்கள் பை-பாஸ் ரோடில் இருந்து இடது பக்கமுள்ள சாலையில் செல்ல வேண்டும்.     

 

Manappaarai Murukku Muruga Vilas

Manappaarai Murukku Muruga Vilas 2

 

 

 

 

 

 

 

 

 

 

மணப்பாறையில் இருக்கும் ஒவ்வொரு கடையிலும் நீங்கள் முறுக்கு வாங்க இயலும். இதோ சாம்பிளுக்கு சில பல படங்கள்:

Manappaarai Murukku Muruga Vilas 3

Manappaarai Murukku Muruga Vilas 4

 

 

 

 

 

 

 

 

 

 

மணப்பாறை என்கிற இந்த ஊரில் மக்கள் அனைவருக்குமே முறுக்கு செய்யும் கலை சிறப்பாக தெரிகிறது. இங்கு எந்த விதமான கருவிகளையும் உபயோகிக்காமல் கையினால் செய்யப்படும் முறுக்கி மிகவும் பிரபலமானது. இதனை கை முறுக்கு என்று அழைக்கின்றனர்.

Manappaarai Murukku Annai Stall

Manappaarai Murukku Special

 

 

 

 

 

 

 

 

 

 

இங்கு அனைத்து கடைகளிலுமே முறுக்குகள் ஒரே விலையில் தான் விற்கப்படுகின்றன. இதனை நான் பலவிதமான கதைகளில் வாங்கி உறுதிப்படுத்திக்கொண்டேன். விலையோ மிகவும் குறிவு. தரமோ அருமை என்று விளம்பரங்களில் வருவது போல அட்டகாசமாக இருக்கிறது. சில பல கடைகளில் முறுக்கு வாங்கி சாப்பிட்டால் சிலருக்கு நெஞ்சில் எரிச்சல் ஏற்படலாம். அதாவது முறுக்கு செய்ய அவர்கள் உபயோகிக்கும் எண்ணெய் அந்த எரிச்சலை ஏற்படுத்துமாம். இதனாலேயே ஹோட்டல் சரவணா பவனில் ஒருமுறை உபயோகித்த எண்ணையை மறுபடியும் உபயோகிக்க மாட்டார்கள். அதனால் வடபழனி அருகில் இருக்கும் பல நடைவண்டி மற்றும் சிற்றுண்டி வியாபாரிகள் அந்த உபயோகிக்கப்பட்ட எண்ணையை வந்து கியூவில் நின்று ஹோட்டல் சரவணா பவனில் வாங்கி செல்வார்கள்.

இதனை என் இங்கு சொல்கிறேன் என்றால் இந்த ஊரில் இருந்து நீங்கள் முறுக்கு வாங்கி தின்றால் அந்த நெஞ்சு எரிச்சல் உங்களுக்கு ஏற்படாது.

Manappaarai Murukku Special 2

Manappaarai Murukku Special 3

 

 

 

 

 

 

 

 

 

 

ஒரு முறுக்கு பாக்கெட் இருபது ருபாய் ஆகும். இந்த இருபது ருபாய் பாக்கெட்டில் இருபத்தி நாலு கைமுறுக்குகள் இருக்கின்றன. இந்த மாதிரி இருபது ருபாய் பாக்கெட் ஒன்று சென்னையிலோ அல்லது வேறு ஊரிலோ வாங்கினால் அதன் விலை குறைந்தது முப்பது ருபாய் முதல் நாற்பது ருபாய் வரை இருக்கும். விலை குறைவாக இருந்தால் அதன் தரத்தை பற்றி சொல்ல வேண்டி இருக்காது. Manappaarai Murukku Special 4

இந்த ஊர் மக்கள் அனைவருமே ஒற்றுமையாக இருப்பது மற்றுமொரு சிறப்பு அம்சம் ஆகும். இந்த கை முறுக்குகளை ஒரு மாதம் வரை வைத்திருந்து சாப்பிடலாம், அதுவரை கெடாமல் இருக்குமாம். அனைத்து கடைகளிலுமே ஒரே அச்சில் வார்த்தது போல முறுக்குகள் காணப்பட்டன. கடந்த ஒரு வாரமாக காலையில் டிப்பன்   = முறுக்கு, மதிய லஞ்ச் = முறுக்கு, மாலையில் = முறுக்கு, இரவு டின்னர் = முறுக்கு என்றவாறு எனக்கு இனிமையாக கழிந்தது.

முறுக்கு மட்டுமில்லாமல் இன்னும் பலவகையான பலகாரங்கள் இங்கு செய்யப்பட்டு விற்பனையானாலும், கைமுறுக்குகள் மட்டுமே சிறப்பாக பேசப்படுகின்றன. அதற்க்கு காரணம் என்னவென்பதை நான் நேரிடையாகவே ருசி கண்டுவிட்டேன். நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் சென்று வாருங்கள். திருச்சியில் இருந்து ஒரு மணி நேரத்தில் உள்ளது மணப்பாறை.

இதுவரையில் பொறுமையாக படித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

Related Posts Widget for Blogs by LinkWithin