இங்கிலாந்து கிரிக்கெட் அணி தேர்வும், ஒரு மர்ம போன் காலும்மன்னிப்பு: இந்த சம்பவம் நடைபெற்றது ஒரு மாதத்திற்கு முன்பாக. தாமதமாக இந்த பதிவை வெளியிடுவதற்கு மன்னிக்கவும்.
இன்றைய ஆட்ட நிலை: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினருக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில், கடந்த ஒரு வருடமாக தடுமாறி வந்த ஆன்ட்ரு ஸ்ட்ராஸ்'ம் பால் காலிங் வூட்'ம் ஆளுக்கொரு சதமடித்து இந்தியர்களுக்கு கடினமான இலக்கை அளித்து உள்ளனர்.
சம்பவம்: அது ஒரு மிகப் பிரபலமான ஓட்டல். அதன் கான்பரன்ஸ் ஹாலில் ஐந்து கனவான்கள் கூடி இருந்தனர். அவர்கள் தான் இங்கிலாந்து கிரிக்கெட் அணி தேர்வாளர்கள். அவர்கள் இந்தியா செல்லும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அவர்கள் தேர்வு செய்த அணியில் துவக்க ஆட்டக்க் காரராக லுக் ரைட்'ஐயும், மத்திய நிலை ஆட்ட காரராக ரவீ போபாரா'வையும் தேர்ந்து எடுத்து இருந்தனர். அந்த அணியில் ஆன்ட்ரு ஸ்ட்ராஸ்'உம் பால் காலிங் வூட்'உம் இடம் பெற வில்லை. அணியை முடிவு செய்த அவர்கள் பத்திரிக்கையாளர்களை அழைக்க இருந்த நேரத்தில் ஒரு போன் கால் வந்தது.
அப்போது வந்த போன் காலை செய்தவர் திரு மைகேல் வாகன் ஆகும். அவர் இங்கிலாந்து அணியின் முன்னால் தலைவர் ஆவார். கடந்த பத்து வருடங்களாக இந்தியாவுடன் தொடந்து விளையாடிய அனுபாவம் பெற்றவர் ஆவார். அவர் தேர்வாளர்களிடம் அணியை பற்றி விசாரித்தார். அவர்களும் அணி விவரங்களை தெரிவித்தனர். அதில் ஆன்ட்ரு ஸ்ட்ராஸ்'ம் பால் காலிங் வூட்'ம் இடம் பெற வில்லை என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தார் மைகேல் வாகன். அதற்க்கு பதிலளித்த தேர்வாளர்கள் கடந்த ஒரு வருடமாக இந்த இரு ஆட்டக்காரர்களும் சிறப்பாக விளையாடததை சுட்டிக் காட்டி அதனால் தன் அவர்கள் தேர்வு செய்யப் படவில்லை என்றும் கூறினார்.
நிற்க.
சமீபத்தில் 1990'களில் வெளிவந்த ஒரு தமிழ் படத்தில் நகைச்சுவை வேந்தர் திரு கவுண்டமணி அவர்கள் ஒரு குறிப்பிட்ட வசனத்தை பேசுவார். அதாவது அவரின் மாமனார் கறுப்பாக இருப்பார். ஆனால் அவரின் மனைவியும் பெண்களும் செக்கச் செவேல் என்று இருப்பதை கண்டு வியப்பார் கவுண்டர். அதற்க்கு அவரின் மாமனார் "மாபிள்ளை, என்னை பார்க்காதீர்கள். என்னுடைய மனைவியை பாருங்கள்" என்று கூறுவர். அப்போது கவுண்டர் "அதாவது, வெதைக்குரவனை பாக்காதே, வெளையுற நிலத்தை பாரு'ன்னு சொல்லுர" என்பார்.
தொடர்க.
மேலே குறிப்பிட்ட அந்த தமிழ் படத்தை லண்டனில் கலைஞர் டிவி;யில் (லக்கி கவனிக்க) பார்த்து கொண்டு இருந்த மைகேல் வாகன், உடனே தேர்வாளர்களுக்கு போன் செய்து பேசியது தான் மேலே நடந்தது. அப்போது அவர் தேர்வாளர்களிடம் "நீங்கள் இங்கிலாந்து அணியை மட்டும் பார்க்காதீர்கள். அவர்கள் விளையாடப் போகும் எதிர் அணியையும் பாருங்கள். கிரிக்கெட் வரலாற்றை கடந்த பல வருடங்களாக கூர்ந்து பார்த்தால், இந்திய அணி விளிம்பு நிலையில் இருக்கும் மற்ற அணி வீரர்களுக்கு உதவுவது நன்றாக தெரியும்".
தேர்வாளர்: " என்ன சார் சொல்றீங்க?".
மைகேல் வாகன்: " ஆமாம், உதாரணமாக அட்டப்பட்டு என்ற வீரரின் அஸ்தமனம் ஆன கிரிக்கெட் வாழ்கையை மீண்டும் துவக்கி வைத்தனர் இந்தியர்கள். இப்படியாக மாத்யூ ஹெயடன், சயீத் அன்வர், சனத் ஜெயசூர்யா, சிவநராயன் சந்தர்பால்; ஏன் எனக்கே மறு வாழ்வு கொடுத்தவர்கள் இந்திய அணியினர். ஆகையால் இங்கிலாந்து அணியை பார்க்காதீர்கள். அவர்களுடன் விளையாடும் இந்திய அணியையும் பாருங்கள், கவுண்டர் கூறியதைப் போல".
இதன் தொடர்ச்சியை நீங்கள் நன்கு அறிவீர்கள். கவுண்டர் அவர்களின் வசனங்கள் எவ்வளவு பிரபலம் என்பதையும், அதன் விளைவுகளையும் இப்போது தெரிந்து கொள்ளுங்கள். எவ்வளவு நாள் ஆனாலும், எவ்வளவு பேர் வந்தாலும் கவுண்டர் கவுண்டர் தான்.