Showing posts with label 2011. Show all posts
Showing posts with label 2011. Show all posts

இந்தியா தென்னாபிரிக்கா மூன்றாவது டெஸ்ட் முதல் நாள் + இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள் India in 2011

மக்களே,

மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் (வழக்கம் போல இன்றைய ஆட்டத்திலும் முன்னணி பெற்றும் அதனை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள தவறி விட்டோம்) இந்திய அணியின் விளையாடும் ஆட்டங்களையும், அது எப்படி இருக்கும் என்று என்னுடைய கணிப்பையும் இந்த பதிவில் பார்ப்போம்:

இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்: 2010-2011

இந்த டெஸ்ட் போட்டியில் தோற்றால் கூட இந்திய அணியானது வரும் ஜூன் மாதம் வரை டெஸ்ட் போட்டிகளில் முதல் இடத்திலேயே இருக்கும் அளவிற்கு தன்னுடைய ரேங்கிங் பாயிண்ட்டுகளை பெற்றுள்ளது. (நடுவில் ஒருநாள் போட்டிகளுக்கான உலக கிண்ண போட்டிகள் வருகின்றன - டெஸ்ட் போட்டிகள் கிடையாது).

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி சிறப்பாக ஆரம்பமாகி இருக்கிறது. கடந்த 14 போட்டிகளில் இரண்டாம் முறையாக டாசில் ஜெயித்தார் தோனி. அதுவே பெரிய விஷயம். பார்க்கலாம், இந்த வருஷமாவது அவருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா என்று. டாசில் ஜெயித்த பிறகு இந்திய அணியானது பீல்டிங் செய்யும் முடிவை எடுத்தது. கடந்த இரண்டு போட்டிகளில் கடினமான சூழலில் இந்திய அணி பேட்டிங் செய்வதும், தென்னாபிரிக்கா அணி சற்று சாதகமான சூழ்நிலையில் பேட்டிங் செய்வதும் தொடர்ந்தது. ஆனால் இந்த போட்டியில் அப்படி நடக்க வில்லை. காலையில் பந்துவீச்சிற்கு சாதகமான நிலையில் தென்னாபிரிக்க அணி விளையாட வந்தது. ஊருக்கு உத்தமர் ஆகிய கிரீம் ஸ்மித் சென்ற போட்டியில் தைரியமாக முதல் பந்தை சந்திக்காமல் விரைவில் ஜாகிர் கானிடம் அவுட் ஆனார். இரண்டாம் இன்னிங்க்சில் என்னமோ தெரியவில்லை, தானே ஜாகிர் கானின் முதல் பந்தை சந்தித்தார். சற்றே தாக்குப்பிடித்து விளையாடினார். ஆனால், ஸ்ரீஷாந்த் பந்துவீச்சின் வேகத்தையும், அவரது பேச்சின் தாக்கத்தையும் சந்திக்க முடியாமல் ஒரு கற்றுக்குட்டி போல டென்ஷன் ஆகி அவுட் ஆனது அந்த போட்டியின் சிறப்பு அம்சம். இந்த நிலையில் யார் ஜாகிர் கான் வீசும் பந்தை சந்திப்பார்கள் என்று பார்க்க ஆவலாக இருந்தேன்.

ஜாகிர் கானை பொறுத்த வரையில் ஸ்மித்தின் விக்கெட் எப்போதுமே ஒரு டிராவலர்ஸ் செக் போனது. எப்போது வேண்டுமானாலும் அவர் என்கேஷ் செய்துக்கொள்வார். சென்ற போட்டியில் இரண்டாவது இன்னிங்க்சில் ஸ்விங் இருக்காது என்ற சூழலில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு முதல் பந்தை சந்தித்த ஸ்மித், இந்த போட்டியில் காலை வேளையில் காற்றின் ஈரப்பதம் மற்றும் ஓவர்காஸ்ட் கண்டிஷன் சூழலில் எட்டாவது டெஸ்ட் ஆடும் பீட்டர்சனை முதல் பந்தை சந்திக்க விட்டார். தொண்ணூறு போட்டிகளை கண்ட ஒரு வீரர் இப்படி ஆடுவது எனக்கு சற்றே ஏமாற்றத்தை கொடுத்தது. 

சென்ற போட்டியில் சேவாக் (வழக்கமாக சேவாக் முதல் பந்தை சந்திக்க மாட்டார்) விஜய் முதல் பந்தை சந்திக்க சென்ற பொது, தடுத்து தானே முதல் பந்தை சந்தித்து ஆடினார். அதுதான் ஒரு சீனியர் செய்யும் செயல். ஆனால், வழக்கமாக முதல் பந்தை சந்திக்கும் ஸ்மித், ஜாகிர் கான் என்றவுடன் பீட்டர்சனை ஆடவிட்டது அவரது குழப்பமான மனநிலையை வெளிப்படுத்தியது. நான் அப்போதே முடிவு செய்துவிட்டேன். ஜாகிர் கான் தன்னுடைய டிராவலர்ஸ் செக்கை என்கேஷ் செய்துவிடுவார் என்று. அதுதான் நடந்தது.

வெளிச்சம் குறைவாகவும், லேசான மழைத்தூறல் வந்ததாலும் ஆட்டம் ஒன்றரை மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. மதிய உணவை முடித்துக்கொண்டு வந்த தென்னாபிரிக்கா அணியினரை இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட் வீழ்த்தி அதிர்ச்சியடைய வைத்தார். பின்னர் அந்த அணியின் மிகச்சிறந்த இரண்டு ஆட்டக்காரர்களும் சேர்ந்து அணியினை தொய்வில் இருந்து தூக்கி நிறுத்தினார்கள். குறிப்பாக ஆம்லா விளையாடியபோது, அவருக்கு ஆடுகளம், சூழல், தட்பவெப்பம், எதிரணி என்று எதுவுமே தோன்றாமல் வெறும் பந்தை மட்டுமே கவனத்தில் கொண்டு சிறப்பாக ஆடினார். அவரது கவுண்டர் அட்டாக்கிங் ஆட்டம் இந்திய அணியை சற்று தடுமாற வைத்தது. முதல் 50 ரன்கள் குவிக்க 111 பந்துகள் எடுத்துக்கொண்ட தென்னாபிரிக்கா, ஆம்லாவின் அதிரடியால் இரண்டாவது 50 ரன்களை வெறும் 51 பந்துகளிலேயே குவித்தனர்.  பின்னர் ஸ்ரீசாந்தின் அதிரடியான பவுன்சர்களால் சற்றே கவனம் குறைந்து தன்னுடைய விக்கெட்டை ஒரு சிறப்பான பிளான் செய்யப்பட்டு எக்சிகியூட் செய்யப்பட்ட பந்துவீச்சில் இழந்தார் ஆம்லா.

தென்னாப்பிரிக்காவின் சிறந்த பேட்ஸ்மேன் ஆவதே தன்னுடைய லட்சியம் என்று சொல்லியுள்ள டீ வில்லியர்ஸ் ஸ்ரீசாந்தின் மற்றுமொரு அட்டகாசமான அவுட் ஸ்விங்கர் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். ஸ்கோர் 164/4. விரைவிலேயே மற்ற விக்கெட்டுகளை வீழ்த்திவிடலாம் என்று இந்திய அணி நினைத்தாலும், கப்தான் தோனியின் டிபென்சிவ் அப்ரோச்சினால் (காலிஸ் மற்றும் பிரின்ஸ் இருவரின் தேர்ந்த ஆட்டத்தினாலும், நான்காவது வேகப்பந்து வீச்சாளர் இல்லாத காரணத்தினாலும்) அடுத்து வேறெந்த விக்கெட்டையும் சாய்க்க இயலவில்லை. ஆட்டமும் முடிந்தது.

1st Day நாளைக்கு காலையில் விரைவாக காலிஸ் விக்கெட்டை வீழ்த்திவிட்டு, முன்னூறு ஓட்டங்களுக்குள் தென்னாப்பிரிக்காவை கட்டுப்படுத்தினால், இந்திய அணிக்கு பிரகாசமான வெற்றிவாய்ப்பு இருக்கிறது. இந்த ஆடுகளமானது வழக்கமாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களில் மட்டைப்பந்தாட்டதிற்கு (அதாங்க பேட்டிங்) மிகவும் சாதகமான ஒன்று. அதற்க்கு பிறகு நான்காம் மற்றும் ஐந்தாம் நாட்களில் சுழல் பந்து வீச்சிற்கு சற்று (கவனிக்கவும், சற்றுதான்) உபயோகமாக இருக்கும். ஆகையால் நாளைக்கு இந்திய அணியின் ஆட்டமானது இந்த போட்டியை நிர்ணயிக்கும்.

என்னுடைய கணிப்பு: இந்தியா முதல் இன்னிங்க்சில் நானூறு ஓட்டங்களை குவித்தால் வெற்றி பெரும்.

ஒரு நாள் போட்டிகள்:Ind Vs SA 

இந்திய அணி சேவாக் இல்லாமல் விளையாடப்போகிறது. அணியின் பந்து வீச்சு இந்த போட்டிகளை நிர்ணயிக்கப்போகிறது. இந்த ஒரு நாள் போட்டிகள் தொடர் அதிக அளவில் ரன்களை கொண்ட ஒரு தொடராகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு முக்கியமான விஷயம் - ஒரு நாள் போட்டிகளில் இருநூறு ரன்களை குவித்த பிறகு சச்சின் இன்னமும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவே இல்லை. அவர் விளையாடும் அடுத்த போட்டி இதுதான். யுவராஜ் சிங்கிடம் இருந்தும், யூசுப் பதானிடம் இருந்தும் சிறப்பான ஆட்டத்தினை எதிர்ப்பார்க்கலாம்.

என்னுடைய கணிப்பு: தென்னாபிரிக்கா 3-2 or 4-1.

India’s upcoming matches in World cup and 2 immediate Tours after the IPL 3:

Indian Team நாளைக்கு ஆஷஸ் மற்றும் இந்திய அணியின் போட்டிகளை பற்றி விரிவாக பேசுவோம்.

தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்பு திரைப்படங்கள் - கலைஞர், சன், ஜெயா, ராஜ் மற்றும் பாலிமர்

மக்களே,

வழக்கம் போல இந்த விடுமுறை சிறப்பு தினத்தையும் நாம் துப்பாக்கி, கடத்தல், வெட்டு, குத்து, கொலை, கற்பழிப்பு காட்சிகள் நிறைந்த படங்களை பார்த்தே கழிப்போம் என்றே தோன்றுகிறது. அதனால் இனிமேல் சின்னத்திரையில் மட்டுமே படங்களை பார்க்கலாம் என்றால், அதுவும் முடியாது போல இருக்கிறது. ஆம், சமீப வருடங்களில் சின்னத்திரையில் தான் பெரும்பாலான படங்கள் ரிலீஸ் ஆனா விவரமே தெரிகிறது. (கேபிளார் புண்ணியத்தில் பலவற்றை அவைத் செய்து விடுகிறேன், இருந்தாலும் சில பல படங்களை என்ன,ஏது என்று தெரியாமல் பார்க்க வேண்டி  இருக்கிறது - தொலைக் காட்சியிலேயே).

All Logos

சன் டிவி: sun_tv_in இவர்கள் வழக்கம் போல ஒரு புதிய படத்தையும் இரண்டு மூன்று பழைய படத்தையும் போட இருக்கிறார்கள். முதல் முறை ஒளிபரப்பில் இருக்கும் படம் : இளைய தளபதி விஜய் நடித்த (நடிக்க முயற்சித்த?!?) போக்கிரி என்ற முக்கால்வாசி சீரியஸ், கடைசி கால்வாசி காமெடி படத்தை ஒளிபரப்புகிறார்கள். மேலும் ரீமேக் ரவி நடித்த "சந்தோஷ் சுப்பிரமணியம்" என்ற படத்தையும் இரண்டாம் முறையாக ஒளிபரப்புகிறார்கள்.

மொத்தத்தில் இது ஒரு இளையதளபதி பொங்கல் தான் சன் டிவியில்.

14th Jan 2010:

                                 10.00 AM Polladhavan                                                        06.00 PM Pokkiri

pollathavan

Pokkiri

 

 

 

 

 

 

 

 

15th Jan 2010

                10.00 AM Santhosh Subramaniyam                                            06.00 PM Thiruppachi

Santhosh subramaniyam

Thirupachi

கலைஞர் டிவி :

kalaignar tv புத்தம்  புது படங்களை போட்டு தாக்கிக் கொண்டு இருக்கும் கலைஞர் டிவி இந்த முறையும் களத்தில் அட்டகாசமாக இறங்குகிறார்கள். ஆம், இரண்டு முதல் முறை ஒளிபரப்பையும் இரண்டு மற்ற புது படங்களையும் ஒளிபரப்புகிறார்கள். இளைய தளபதி பறந்த "குருவி" படம் இவர்களின் எதிர்பார்ப்பை தூக்கி இருக்கிறது. ஆம், இந்த படத்தை கண்டிப்பாக தியேட்டரில் எல்லாம் யாரும் பார்க்காததால், கண்டிப்பாக டிவியில் பார்ப்பார்கள். அதனால் ரேட்டிங் ஏறும் என்று ஒரு அசாத்திய நம்பிக்கை. அதனால் பத்து செகண்ட் விளம்பரம் ருபாய் இருபதாயிரம் என்று கூட விற்கிறார்கள். ஆனானப்பட்ட தசாவதாரம் கூட இருபத்தி  ஐந்தாயிரம் ரூபாய்க்கே விற்றார்கள்.

14th Jan 2010:

                                    10.00 AM Pandi                                                           01.30 PM Kuruvi

pandi-may24-2008

Kuruvi

15th Jan 2010:

             10.00 AM Sivapuram                         01.30 PM Jillunu Oru Kadhal                                   06.00 PM Muthirai

sivapuram-oc23-2008

jillunu oru kaadhalmuthirai 

ஜெயா டிவி: 

tamil-jaya-tv-logo

வழக்கம் போல இவர்களும் ஒரே ஒரு படத்தை வைத்துக் கொண்டு களத்தில்  இறங்குகிறார்கள். ஆனால் அதுவும் விஜய் படம் என்பது தான் கொடூரம். ஆம், சிவகாசி படத்தை இவர்கள் ஒளிபரப்புகிறார்கள். வழி இல்லாமல் இந்த பொங்கலுக்கு கேபிள் கனேக்க்ஷனை புடுங்கி விட வேண்டிய சூழல் வந்தாலும் வரலாம்.  என்ன கொடுமை மருத்துவர் விஜய் இது?

Sivakasi_(film)_300

Paramasivan pudhupettai-4437

 

 

 

 

 

 

 

 

 

பாலிமர் டிவி:

polimer

புதிதாக களத்தில் இறங்கி குறுகிய காலத்தில் ராஜ் டிவியை முந்திய இவர்களும் இந்த முறை படங்களுடன் களத்தில் இறங்கி விட்டனர். ஆனால், எத்தனை நாள் பெரிய பெரிய படங்களுடன் இவர்களால் போட்டி இட இயலும் என்பது தெரிய வில்லை. இந்த முறை சற்று வித்தியாசமாக ரஜினிகாந்த் நடித்த ஒரே படமான முள்ளும் மலரும் படத்தை மறு ஒலிபரப்பு செய்கிறார்கள், அதுவும் மேம்படுத்தப்பட்ட தரத்துடன். வழக்கம் போல இரண்டு ஹாலிவுட் படங்களும், ஒரு புதிய தமிழ் படமும் கூட உண்டு. சாபூதிரீ என்ற படத்தை இவர்கள் ஒளிபரப்புகிறார்கள்.

SaaBooThree1

mullum malarum

iam david

 

 

 

 

 

 

 

ராஜ் டிவி

raj_tv

நாங்களும் களத்தில் இருக்கிறோம் என்பதை காட்ட ராஜ் டிவி கடுமையாக போராடிக் கொண்டு இருக்கிறது. ஆனாலும், தலைமையில் தடுமாற்றம் இருப்பதால் முயற்சிகள் கை கூடவில்லை. இந்த முறை சற்று புதுமையாக புரட்சி தலைவரை நம்பி களத்தில் இறங்கி இருக்கிறார்கள். ஆம், சென்ற ஆண்டு புரட்சி கலைஞரை நம்பியது வீண் ஆனது(மரியாதை தியேட்டரில் ஊத்திக் கொண்டு அவமரியாதை ஆனது). அதனால் புரட்சி தலைவர் எம்ஜியார் நடித்த படங்களை முதல் முறையாக ஒளிபரப்புகிறார்கள். வழக்கம் போல அவர்கள் தயாரிப்பான காதல்னா சும்மா இல்லை என்ற படமும் உண்டு. ஒரு நல்ல படத்தை (தெலுகு - கம்யம்) எப்படி ஒரு மொக்கை ஹீரோவை கொண்டு வீணடிக்கலாம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

alibabavum40thirudargalum1

adimai-pen-7378

kadhalna summa illai

Enjoy.

2009ல் சிங்களம், 2011ல் தமிழகம்-இளைய தபதி விஜய் அவர்களின் முழக்கம்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். பல நாட்களாக இந்தியாவில் இல்லாததால் என்னால் வலையுலக பணிகளை கவனிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.

திரும்பிய உடனே எனக்கு ஒரு அதிர்ச்சி மெயில் வந்தது. அதனை பார்த்த உடனே எனக்கு ஒரு கணம் கையும் ஓட வில்லை, வில்லும் - மன்னிக்கவும் - காலும் ஓட வில்லை.


இதோ அந்த படங்களை உங்களின் மேம்பட்ட பார்வைக்கு வைத்து உள்ளேன். பாருங்கள்.



சிவபெருமானுக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம்?

அட, விஜய்க்கும் சிங்களத்துக்கும் என்ன சம்பந்தம்?

அட, 2011க்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம்?


இதை எல்லாம் கேட்டால் நம்மளை முட்டாள்'ன்னு சொல்றாங்க தல.

இப்போது சில பல கேள்விகள்:

இவை எல்லாம் டாக்டர் விஜய் அவர்களின் பார்வைக்கு போகுமா?

எல்லாம் தெரிந்துமா அவர் சும்மா இருக்கிறார்?

ஹிந்து முன்னணி என்ன செய்து கொண்டு இருக்கிறது? முன்பு ஒருமுறை இதைப் போல போஸ்டர் ஒட்டியதற்கு அவர்கள் பிரச்சினை செய்ததாக நியாபகம்.

இந்த முறை விஜய் அவர்கள் எடுபட்டு உள்ளதால் அமைதியாக விட்டு விட்டார்கள?

இதை படித்து விட்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

போய் தமிலிஷ்'இல் வோட்டு போடுங்கள் சார்,உங்களுக்கு புண்ணியமாக போகும்.
Related Posts Widget for Blogs by LinkWithin