கை மாறியது இசை அருவி மற்றும் சிரிப்பொலி - பலமானது கலைஞர் குழுமம்

மக்களே,

ரொம்ப நாள் கழிச்ச்சு இன்னைக்கு தான் சென்னையில் ஒரு சன்டேவை கழித்தேன். வழக்கம் போல எங்கும் போகாமல் வீட்டிலேயே கழிக்கலாம் என்று நினைத்து தொலைக்காட்சியை ஆன் செய்து காமெடி அல்லது மியூசிக் சேனல் பக்கம் போனால் ஒரு விந்தை காணப்பட்டது. ஆம், வழக்கமாக ரெண்டு பாட்டுக்கு ஒரு முறை விளம்பர பிரேக் எடுக்கும் இசை அருவி மற்றும் சிரிப்பொலி சேனல்களில் இன்று விளம்பரங்களே காணப்படவில்லை. (மிதமாக இரண்டு மூன்று குழும விளம்பரங்களே வந்தன). சரிதான், என்னமோ விஷயம் என்று விசாரித்தேன். அதன் பின்னணியே இன்றைய இந்த பதிவு.

Kalaignar Media 

கலைஞர் தொலைக்காட்சி முதன்முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப் பட்டபோது தொடர்ச்சியாக மூன்று நான்கு சேனல்கள் ஆரம்பிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. பின்னர் இசை அருவி என்ற மியூசிக் சேனல் ஆரம்பிக்கப்பட்டபோது தமிழக தொலைக் காட்சி வரலாற்றில் இல்லாத ஒரு புதுமையாக அந்த சேனலை மார்க்கெட் செய்யும் பொறுப்பை வேறு ஒரு தனியார் நிர்வாகத்திடம் மினிமம் கியாரேன்டி முறையில் ஒப்படைக்கப்பட்டது.

அப்படி ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு தனியார் நிறுவனமே சோசியல் மீடியா இந்தியா லிமிடெட். இந்த நிறுவனம் நார்த்கேட் டெக்னாலஜிஸ் லிமிடெட் என்ற அமெரிக்க நிறுவனத்தின் இந்திய அமைப்பாகும். இந்த நார்த்கேட் டெக்னாலஜிஸ் லிமிடெட் சுமார் ஐந்நூறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமானமுள்ள ஒரு மிகப்பெரிய இன்டர்நெட் துறை சார்ந்த நிறுவனமாகும். அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

பின்னர் கலைஞர் நிர்வாகம் சென்னையில் முரசு என்ற கேபிள் சேனலை கூட மார்கெட் செய்யும் பொறுப்பை இந்த சோசியல் மீடியாவிடமே ஒப்படைத்தது. அதன் பின்னர் இந்த ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட சிரிப்பொலி என்ற காமெடி சேனலை கூட மார்கெட் செய்யும் பொறுப்பு இவர்களுக்கு வழங்கப் பட்டது. கலைஞர் குழும நிழலாகவே இவர்கள் கருதப்பட்டார்கள். ஆரம்பித்த சில நாட்களிலேயே இசை அருவி சேனல் சிறப்பாக செயல்பட்டு சன் மியூசிக் சேனலை ஆட்டம் காண வைத்தது (டி.ஆர.பி ரேட்டிங் மற்றும் விளம்பர வருவாய் - இரண்டிலுமே).

ஆம், எந்த ஒரு துறையிலும் முதன்மையாக இருக்கும் சன் குழும சேனலை ஆட்டம் காண வைத்தது இந்த இசை அருவி சேனல். முதன் முறையாக மியூசிக் சேனல்களில் முதல் ரேட்டிங் பெற்று சன் குழுமத்தினரை ஆட்டம் காண வைத்தது. மேலும் சோசியல் மீடியா நிர்வாகத்தினர் புதுமையாக பல நிகழ்ச்சிகளை செய்து (தமிழ் மியூசிக் அவார்ட்ஸ், பல சிறப்பு நிகழ்வுகள் என்று) தமிழக மக்களை தங்கள் கட்டுக்குள் வைத்து இருந்தனர்.

ஆனால் திடீரென்று சனிக்கிழமை அன்று கலைஞர் டிவி நிர்வாகம் அவர்களின் காண்டிராக்டை முறித்துக்கொண்டது, அதுவும் உடனடியாக. இதில் உடனடியாக என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். இந்த தீபாவளி சீசனில் பலரும் விளம்பரத்தில் குறியாக இருக்கும் போது திடீரென்று இந்த சம்பவம் நடந்து உள்ளது. இது வரை கொடுத்து உள்ள விளம்பரங்கள் அனைத்தும் கேன்சல் செய்யப் பட்டு இன்று முதல் அனைத்து விளம்பரங்களும் கலைஞர் டிவி நிர்வாகத்திடம் மட்டுமே புக் செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இதோ, அதனை உறுதிப்படுத்தும் கடிதம்.

Isaiaruvi & Sirippoli - Marketing copy

இதன் காரணமாக இன்று (அதாவது ஞாயிற்றுகிழமை) ஆச்சரியமாக கலைஞர் டிவி மார்கெட்டிங் குழு பணிக்கு வந்தார்கள். வந்து அவர்கள் அனைவரிடமும் புதிய விளம்பர ஒப்பந்தங்கள் செய்து அதன் பின்னரே விளம்பரங்கள் வர ஆரம்பித்தன. பின் குறிப்பு: எதற்காக இந்த மாற்றம் என்பதில் பல கருத்துக்கள் நிலவுகின்றன. நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து இதுவரை தகவல்கள் வராததால் எதனையும் உறுதிப்படுத்தி கூற இயலவில்லை.

அதே சமயம் சில பல ரூமர்கள் / வதந்திகள் உலவுகின்றன. அவற்றை மட்டும் இங்கே அளிக்கிறேன். கவனிக்கவும், இவை உறுதிப்படுத்தப்படாதவை.

1. மினிமம் கியாரேன்டி கடந்த நான்கு மாதங்களாக தரப்படவில்லையாம். பல நினைவுருத்தல்களுக்கு பின்னரே இந்த திடீர் அதிரடி முடிவாம்.

2. கலைஞர் குழும உயர் அதிகாரி ஒருவருக்கும் சோசியல் மீடியா சென்னை நிர்வாகத்துக்கும் கடந்த பல மாதங்களாக நடந்த பனிப்போரின் விளைவே இது என்றும் கூறுகிறார்கள். கடைசியில் குடும்பமே வென்றதாம். இதனை கொண்டாடும் விதமாக இன்று பணிக்கு வந்த பெரும்பாலான அலுவலர்களை ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலில் மதிய விருந்து வைத்து மகிழ்ந்தாராம்.

3. இந்த மார்கெட்டிங் முறையை அமுல்படுத்தியவர் கலைஞர் தொலைக்காட்சியின் முதன்மை மேலாளர் திரு சரத்குமார் ஆகும். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் இருவது சதவீதம் பங்குதாரரும் ஆவார். நவம்பரில் நடந்த ஒரு சம்பவத்திற்கு பின்னர் இவர் கலைஞர் டிவி வருவதே இல்லை என்பது ஊரறிந்த உண்மை. அவரே இல்லாதபோது, இவர்களுக்கு என்ன வேலை என்று செயல்பட்டதால் நடந்த வேலை இது என்றும் கூறுகிறார்கள்.

நாளைய மனிதன் - அதிசய மனிதன் படங்களை தொடர்ந்து "நானே வருவேன் "

மக்களே,

இப்போது வேலு பிரபாகரனின் காதல் கதை என்ற படத்தை எடுத்த வேலு பிரபாகரன அவர்களை கடவுள், புரட்சிக்காரன், காதல் கதை போன்ற புரட்சிகரமான முற்போக்கு (முன் நவீனத்துவம்?) சிந்தனையுள்ள படங்களை இயக்கியவராக மட்டுமே நமக்கு தெரியும். நேற்று எனக்கு வந்த ஒரு அழைப்பிதழை பார்த்த பொது தான் அவரைப் பற்றிய முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக்கவும்.

நான் சிறு வயதில் ரசித்து பார்த்த படங்களில் நாளைய மனிதன், அதிசய மனிதன், ஜென்ம நட்சத்திரம் போன்ற படங்கள் அடங்கும். அதிலும் சாகாத ஒரு மனிதனை பற்றி சிறு வயதில் சிலாகித்து பயந்த காலங்களும் உண்டு. நாம் அதிஷா இந்த படங்களுக்கு ரசிகர் மன்றமே ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார் போல. அந்த அளவுக்கு இந்த படங்களுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. இப்போது இந்த "நாளைய மனிதன் - அதிசய மனிதன்" படங்களை தொடர்ந்து அடுத்து ஒரு படம் இதே வரிசையில் வரப் போகிறது. இதோ அந்தப் படத்தின் விவரங்கள்.



முதல் படமாகிய நாளைய மனிதனில் இளைய திலகம் பிரபு ஒரு ஆங்கில காப் போன்ற ஒரு போலீஸ வேடமேற்று நடித்து இருப்பார். அதிலும் அந்த கிளைமாக்ஸ் காட்சி இப்போதும் கண்முன்னே நிற்கும். இரண்டாவது பாகத்தில் நிழல்கள் ரவி அதைப் போலவே போலீஸ வேடத்தில் வருவார். இது போன்ற படங்களில் எல்லாமே வருவது போல கிளைமாக்சில் அந்த வில்லன் சாவது போல தெரியும், ஆனாலும் உறுதியாக சொல்ல முடியாது. இப்போது இந்த புதிய படத்தில் பாபு கணேஷ் அவர்கள் பிரபு, நிழல்கள் ரவி போல லீட் கதாபாத்திரம் ஆக நடிக்கிறார் போல.



ஆனாலும் ஸ்ரீமன் கையில் சிவப்பு பெயின்ட் அடித்த அந்த கோடாரியை வைத்து இருப்பதை பார்க்கும் போது அவரும் ஹீரோவாக இருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது. சின்னி ஜெயந்த் வேறு இருக்கிறார். என்ன நடக்குமோ என்று இப்போதே ஒரு பயம் கிளம்பி விட்டதை தவிர்க்க முடியவில்லை.

அந்த படங்களில் எல்லாம் அந்த நாளைய மனிதனாக நடித்தவர் நம்ம அஜய் ரத்னம். அவரை காணவில்லை போல. அதனால் ஒரு புதிய முகம் காட்டாத வில்லன் நடிக்கிறார் என்று நாம் வைத்துக் கொள்ளலாம்.

தசாவதாரத்துடன் மோதும் படிக்காதவன் : தீபாவளி திரைப்படங்கள்

சென்ற வருடம் தீபாவளி அன்று சந்திரமுகியுடன் மோதிய பில்லா கதை போல இந்த வருடம் தீபாவளி அன்று மறுபடியும் மோத சன் டிவி மற்றும் கலைஞர் டிவி நிறுவனங்கள் தயாராக உள்ளன.

கலைஞர் டிவி மிகுந்த பொருட்செலவில் வாங்கிய கமல் பத்து வேடத்தில் கலக்கிய தசாவதாரம் படத்தை இந்த தீபாவளிக்கு ஒளிபரப்புகின்றனர். அதற்காக அவர்கள் விளம்பர வேட்டையில் இறங்கி உள்ளனர். வழக்கமாக பதினாலாயிரம் ருபாய் விலைக்கு பத்து செகண்ட் சார்ஜ் செய்யும் கலைஞர் டிவி இந்த படத்துக்காக ருபாய் இருபத்தி ஐந்தாயிரம் என்று விலையை நிர்ணயித்து உள்ளனர். கமல் மேஜிக் பெரிய திரையில் நடந்தது போல சின்ன திரையிலும் நடக்கும் என்பது இவர்களின் எண்ணம்.


அதே நேரம் தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தை ஒழி பரப்ப சன் டிவி முடிவு எடுத்துள்ளது. வழக்கமாக இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்க்கு பத்து செகண்ட் விளம்பரம் வாங்கும் சன் டிவி இந்த மெகா ஹிட் பிளாக்பஸ்டர் படத்துக்கு முப்பத்தி எட்டாயிரம் ருபாய் சார்ஜ் செய்கிறார்களாம். வழக்கம் போல இதுவும் ஒரு வெற்றி முயற்சியாக அமையும் என்பதில் அவர்களுக்கு இருவேறு எண்ணம் இல்லையாம்.

சென்ற வருடம் இதே போல நடந்த மோதலில் (சந்திரமுகி + பில்லா) சன் டிவியே ஜெயித்தது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம். அதனால் இந்த வருடம் தசாவதாரம் படத்துடன் மோத மருத்துவர் விஜய் நடித்த போக்கிரி படம் தான் ஒலிபரப்ப படும் என்று பலரும் நினைத்திருந்த வேளையில் இப்படி ஒரு செய்தி வந்துள்ளது அனைவரின் கவனத்தியும் கவர்ந்து உள்ளது. குறிப்பாக சுப்ப்ரமணிபுரம் மேட்டருக்கு பின்னர் இப்படி நடந்து உள்ளது ஆச்சரியமாக உள்ளது.

சன் டிவியை பற்றி நன்றாக தெரிந்தவர்கள் கண்டிப்பாக அவர்கள் வேறொரு படத்தை கமலுக்கு போட்டியாக களமிறக்குவார்கள் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்கிறார்கள். பார்க்கலாம், என்ன நடக்கிறது என்று.
Related Posts Widget for Blogs by LinkWithin