அதிர்தியூட்டும் தகவல் - சென்னையில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறப்பு

மக்களே,

இந்த தகவல் இப்போது தான் என்னை வந்து அடைந்தது. இன்னும் சில மணி நேரங்களில் பல செய்தி சேனல்கள் இந்த தகவலை உங்களுக்கு அளிக்கலாம். ஆனால், முதன் முதலில் இந்த தகவலை உங்களுக்கு அளித்தது நான்தான் என்ற விஷயத்திற்காக மட்டுமில்லாமல் ஒரு சமுதாய நோக்கோடும்தான் இந்த செய்தியை வெளியிடுகிறேன்.

இன்று காலை சென்னை மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறந்து போய் கரையை சேர்ந்தன. ஒரே நேரத்தில் இவ்வளவு மீன்களின் அகால மரணம் அப்பகுதியில் இருந்த பலரையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.  சிறிது நேரத்தில் மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. மீனவர்கள் பலரும் அச்சத்துடன் கடற்கரையில் இதனை பார்த்தபடி இருக்க அரசு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் காத்து இருந்தனர்.

GREECE POLLUTION DEAD FISH

கடற்கரையில் நடந்த இந்த சம்பவம் சில நேரங்களில் தமிழ்நாடு முழுவதும் பரவி, பல இடங்களில் இருந்து இதே மாதிரி செய்திகள் வர ஆரம்பித்து விட்டன. ஆம், தமிழகத்தின் பல இடங்களிலும் மீன்கள் இறந்துக் கொண்டே இருந்தன. இதோ, மதுரையில் ஒரு ஆற்றில் மீன்கள் இறந்த காட்சி.

A3

சற்று நேரத்தில் அரசாங்க அதிகாரிகளும் தனியார் சுற்று சூழல் ஆர்வலர்களும் இந்த பகுதிகளுக்கு சூழ்ந்து கொண்டு ஆராய துவங்கினர். ஆனாலும் இந்த மர்மம் பிடிபடவில்லை.

A4

பின்னர் பிரபல மீன்வளத்துறை நிபுணரும் நியூசிலாந்து நாட்டின் மீன்வளத்துறை விஞ்ஞானியுமாகிய டாக்டர் செவன் அவர்கள் இந்த மர்மத்தை கண்டுபிடிக்க வந்தார். அவர் மீன்களை ஆராய்ந்த போது எடுக்கப்பட்ட படம் இது. 

A5

தன்னுடைய துறைசார்ந்த அறிவின் மூலமாக அந்த நிபுணர் இது மீன்களின் கூட்டு தற்கொலை என்பதையும் அதற்கான காரணத்தையும் கண்டறிந்தார். இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த மீன்களின் மரணம் அனைத்தும் தமிழகத்தை சார்ந்தே உள்ளது என்பது. இப்படி பல்லாயிரகணக்கான மீன்கள் கூட்டாக தற்கொலை செய்துக் கொள்ள காரணம் என்ன?

 

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

A6

இளைய தளபதி மருத்துவர் விஜய் அவர்களின் ஐம்பதாவது படத்தின் பெயர் சுராவாம். அந்த பெயர் தங்களின் இனத்தையே அவமானபடுத்துவதாக இருப்பதாக கருதிய மீன்கள் அந்த படத்தின் பெயரை மாற்ற வேண்டி தங்களின் கோபத்தை இப்படி தற்கொலை செய்துக் கொண்டு வெளியிட்டு உள்ளனர். தங்களின் இன-மான உணர்வை இப்படி தற்கொலை செய்து வெளிப்படுத்துவது தானே தமிழர்களின் இயல்பு, அதனால் தான் இந்த கூட்டு தற்கொலை என்பது மீன்களின் கையில் இருந்த ஒரு தற்கொலை கடிதம் விளக்கியதாம். இதனை அந்த மீன் நிபுணர் கூறினார்.

அதான் வேட்டைக்காரன் சீசன் முடிஞ்சுடுச்சு இல்ல, இப்போ இந்த மாதிரி எதாவது ஆரம்பிச்சா தானே பொழுது போகும்?

மக்களே, நானும் ஒரு மருத்துவர் விஜய் ரசிகன் என்பதை மறந்து விடாதீர்கள். இது ஒரு பகடி (அதாங்க காமெடி). அதனால் இதனை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் ஜாலியாக விட்டு விடுங்கள்.

வாழ்க மருத்துவர் விஜய். ஓடுக அவரின் படங்கள்.

அஜித்துடன் மோதும் விஜய் - குடியரசு தின கொண்டாட்டங்கள் - சின்னத்திரை படங்கள்

மக்களே,

இளைய தளபதி  மற்றும் தல படங்கள் ஒரு சேர திரைக்கு வந்த பல வருடங்கள் ஆகி விட்டன. எனக்கு தெரிந்தவரையில் ஒரு மூன்று முறை இப்படி நிகழ்ந்துள்ளது (அதாவது இந்த பட்டங்கள் இவர்களுக்கு கொடுக்கப்பட்டவுடன்). ஆனால் சமீப காலங்களில் இவர்கள் இருவரின் படங்கள் ஒருங்கே வருவதில்லை. அந்த குறையை சின்னத்திரை இப்போது தீர்த்து வைக்கிறது. ஆம், இந்த குடியரசு தினம் இந்த இருவரின் மோதலையும் நாம் காணலாம்.

 

Kalaignar TV Aegan Kalaignar TV Pasanga

இந்த முறை கலைஞர் டிவியும் சன் டிவியும் இவர்களை மோதவிட்டு வசூல் பார்க்கப் போகிறார்கள். ஆம், இளைய தளபதியின் அழகிய தமிழ் மகனும் தல'யின் ஏகனும் நேருக்கு நேர் மோதவிருக்கிரார்கள். இந்த இரண்டு படங்களுமே சரியாக ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், சின்னத்திரையில் நல்ல வசூல் பார்க்கலாம் என்பது இந்த தொலைக்கட்சியினரின் கணிப்பு.

Sun TV ATM

ஆக மொத்தம் இவர்களின் திரைப்படங்களை பாருங்கள், குடியரசை கொண்டாடுங்கள்.

தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்பு திரைப்படங்கள் - கலைஞர், சன், ஜெயா, ராஜ் மற்றும் பாலிமர்

மக்களே,

வழக்கம் போல இந்த விடுமுறை சிறப்பு தினத்தையும் நாம் துப்பாக்கி, கடத்தல், வெட்டு, குத்து, கொலை, கற்பழிப்பு காட்சிகள் நிறைந்த படங்களை பார்த்தே கழிப்போம் என்றே தோன்றுகிறது. அதனால் இனிமேல் சின்னத்திரையில் மட்டுமே படங்களை பார்க்கலாம் என்றால், அதுவும் முடியாது போல இருக்கிறது. ஆம், சமீப வருடங்களில் சின்னத்திரையில் தான் பெரும்பாலான படங்கள் ரிலீஸ் ஆனா விவரமே தெரிகிறது. (கேபிளார் புண்ணியத்தில் பலவற்றை அவைத் செய்து விடுகிறேன், இருந்தாலும் சில பல படங்களை என்ன,ஏது என்று தெரியாமல் பார்க்க வேண்டி  இருக்கிறது - தொலைக் காட்சியிலேயே).

All Logos

சன் டிவி: sun_tv_in இவர்கள் வழக்கம் போல ஒரு புதிய படத்தையும் இரண்டு மூன்று பழைய படத்தையும் போட இருக்கிறார்கள். முதல் முறை ஒளிபரப்பில் இருக்கும் படம் : இளைய தளபதி விஜய் நடித்த (நடிக்க முயற்சித்த?!?) போக்கிரி என்ற முக்கால்வாசி சீரியஸ், கடைசி கால்வாசி காமெடி படத்தை ஒளிபரப்புகிறார்கள். மேலும் ரீமேக் ரவி நடித்த "சந்தோஷ் சுப்பிரமணியம்" என்ற படத்தையும் இரண்டாம் முறையாக ஒளிபரப்புகிறார்கள்.

மொத்தத்தில் இது ஒரு இளையதளபதி பொங்கல் தான் சன் டிவியில்.

14th Jan 2010:

                                 10.00 AM Polladhavan                                                        06.00 PM Pokkiri

pollathavan

Pokkiri

 

 

 

 

 

 

 

 

15th Jan 2010

                10.00 AM Santhosh Subramaniyam                                            06.00 PM Thiruppachi

Santhosh subramaniyam

Thirupachi

கலைஞர் டிவி :

kalaignar tv புத்தம்  புது படங்களை போட்டு தாக்கிக் கொண்டு இருக்கும் கலைஞர் டிவி இந்த முறையும் களத்தில் அட்டகாசமாக இறங்குகிறார்கள். ஆம், இரண்டு முதல் முறை ஒளிபரப்பையும் இரண்டு மற்ற புது படங்களையும் ஒளிபரப்புகிறார்கள். இளைய தளபதி பறந்த "குருவி" படம் இவர்களின் எதிர்பார்ப்பை தூக்கி இருக்கிறது. ஆம், இந்த படத்தை கண்டிப்பாக தியேட்டரில் எல்லாம் யாரும் பார்க்காததால், கண்டிப்பாக டிவியில் பார்ப்பார்கள். அதனால் ரேட்டிங் ஏறும் என்று ஒரு அசாத்திய நம்பிக்கை. அதனால் பத்து செகண்ட் விளம்பரம் ருபாய் இருபதாயிரம் என்று கூட விற்கிறார்கள். ஆனானப்பட்ட தசாவதாரம் கூட இருபத்தி  ஐந்தாயிரம் ரூபாய்க்கே விற்றார்கள்.

14th Jan 2010:

                                    10.00 AM Pandi                                                           01.30 PM Kuruvi

pandi-may24-2008

Kuruvi

15th Jan 2010:

             10.00 AM Sivapuram                         01.30 PM Jillunu Oru Kadhal                                   06.00 PM Muthirai

sivapuram-oc23-2008

jillunu oru kaadhalmuthirai 

ஜெயா டிவி: 

tamil-jaya-tv-logo

வழக்கம் போல இவர்களும் ஒரே ஒரு படத்தை வைத்துக் கொண்டு களத்தில்  இறங்குகிறார்கள். ஆனால் அதுவும் விஜய் படம் என்பது தான் கொடூரம். ஆம், சிவகாசி படத்தை இவர்கள் ஒளிபரப்புகிறார்கள். வழி இல்லாமல் இந்த பொங்கலுக்கு கேபிள் கனேக்க்ஷனை புடுங்கி விட வேண்டிய சூழல் வந்தாலும் வரலாம்.  என்ன கொடுமை மருத்துவர் விஜய் இது?

Sivakasi_(film)_300

Paramasivan pudhupettai-4437

 

 

 

 

 

 

 

 

 

பாலிமர் டிவி:

polimer

புதிதாக களத்தில் இறங்கி குறுகிய காலத்தில் ராஜ் டிவியை முந்திய இவர்களும் இந்த முறை படங்களுடன் களத்தில் இறங்கி விட்டனர். ஆனால், எத்தனை நாள் பெரிய பெரிய படங்களுடன் இவர்களால் போட்டி இட இயலும் என்பது தெரிய வில்லை. இந்த முறை சற்று வித்தியாசமாக ரஜினிகாந்த் நடித்த ஒரே படமான முள்ளும் மலரும் படத்தை மறு ஒலிபரப்பு செய்கிறார்கள், அதுவும் மேம்படுத்தப்பட்ட தரத்துடன். வழக்கம் போல இரண்டு ஹாலிவுட் படங்களும், ஒரு புதிய தமிழ் படமும் கூட உண்டு. சாபூதிரீ என்ற படத்தை இவர்கள் ஒளிபரப்புகிறார்கள்.

SaaBooThree1

mullum malarum

iam david

 

 

 

 

 

 

 

ராஜ் டிவி

raj_tv

நாங்களும் களத்தில் இருக்கிறோம் என்பதை காட்ட ராஜ் டிவி கடுமையாக போராடிக் கொண்டு இருக்கிறது. ஆனாலும், தலைமையில் தடுமாற்றம் இருப்பதால் முயற்சிகள் கை கூடவில்லை. இந்த முறை சற்று புதுமையாக புரட்சி தலைவரை நம்பி களத்தில் இறங்கி இருக்கிறார்கள். ஆம், சென்ற ஆண்டு புரட்சி கலைஞரை நம்பியது வீண் ஆனது(மரியாதை தியேட்டரில் ஊத்திக் கொண்டு அவமரியாதை ஆனது). அதனால் புரட்சி தலைவர் எம்ஜியார் நடித்த படங்களை முதல் முறையாக ஒளிபரப்புகிறார்கள். வழக்கம் போல அவர்கள் தயாரிப்பான காதல்னா சும்மா இல்லை என்ற படமும் உண்டு. ஒரு நல்ல படத்தை (தெலுகு - கம்யம்) எப்படி ஒரு மொக்கை ஹீரோவை கொண்டு வீணடிக்கலாம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

alibabavum40thirudargalum1

adimai-pen-7378

kadhalna summa illai

Enjoy.

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா

மக்களே,

நேற்று திருநெல்வேலி செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. சரி, ரொம்ப நாளா இந்த திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா என்று கேள்விப் பட்டுக்கொண்டு வருகிறோம், அதனை இந்த முறை நேரில் சென்று சுவை பார்த்து விடலாம் என்று முடிவு செய்தவாறே திருநெல்வேலியை சென்றடைந்தேன். பின்னர் அங்கு விசாரித்தபோது தான் தெரிய வந்தது, இருட்டுக்கடை அல்வா விற்கும் கடை மாலை ஆறு மணிக்கு தான் திறப்பார்கள் என்று.

சரி, கடை எங்குதான் இருக்கிறது என்று விசாரித்து வைத்துக் கொண்டேன். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் எதிரில் இந்த இருட்டுக்கடை அல்வா விற்கும் கடை உள்ளது. இந்த கடைக்கு பெயர் எதுவும் கிடையாது. அதேபோல விற்பனை நேரமும் மாறுவதில்லை. கடையின் பெயர்பலகை கூட கிடையாதாம். சரி, என்று நினைத்துக் கொண்டு திருநெல்வேலியில் உள்ள நண்பரை சந்திக்க தொலைபேசியில் அழைத்தால் அவர் மதிய உணவுக்கு அழைத்தார். உணவு உண்டுவிட்டு வரும் போது மணி நான்கு முப்பது. அப்போது என்னுடைய கார் சென்ற தெருவை பார்த்தால் அதுதான் நெல்லையப்பர் கோவில் இருக்கும் தெருவாம். சரி, நம்முடைய இருட்டுக்கடை அல்வா விற்கும் கடையை பார்க்கலாம் என்று பார்த்தால், அங்கே ஒரு கூட்டம் வரிசையில் நின்றுக் கொண்டு இருந்தது.

DSC01329  DSC01330

அது சரி, இப்போதே இந்த கூட்டமா? அப்படியானால், மாலை ஆறு மணிக்கு கடை திறக்கும்போது எப்படி இருக்குமோ? என்று எண்ணி என்னுடய கார் டிரைவரை விசாரித்தேன். அப்போது அவர், "சார், கூட்டம் அலைமோதும், அதனால் வாங்குவது சற்று கடினம்தான்" என்று கூறினார். என்னுடைய நண்பர்களும். மனைவிகளும் (அதாவது நண்பர்களின் மனைவிகளும்) திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா இல்லாமல் சிங்கார சென்னைக்கு வரக்கூடாது என்று உத்தரவு போட்டு இருந்ததால் என்ன செய்வது என்று நொந்துக் கொண்டே என்னுடைய அறைக்கு வந்து சேர்ந்தேன்.

அப்போது நான் தங்கி இருந்த ஹோட்டலின் முதலாளி ஒரு ஐடியா சொன்னார். அதாவது பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு அல்வா கடை இருக்கிறது. அது ஊருக்கு புதிதாக வருபவர்களை ஏமாற்றவே, கடையின் பெயரையே "திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா" என்று செயல்பட்டுக் கொண்டு வருகிறது. நீங்கள் வேண்டும் என்றால் அங்கே வாங்கி உங்கள் நண்பர்களுக்கு கொடுத்தால் நீங்களும் கொடுத்த வாக்கை மீறாமல் இருக்கலாம் அல்லவா என்று கூறினார். அவர் சொல்வதும் சரிதான் என்று நினைத்துக் கொண்டேன். நான் இருட்டுக்கடை அல்வா வாங்கி வருவதாக தானே சொன்னேன்? இப்போது இங்கே வாங்கினால் அதில் தவறேதும் இல்லை என்று நினைத்துக் கொண்டு வாங்கினேன். ஒரு கிலோ அல்வா என்பது ரூபாயாம். அதனை நன்றாக பேக் செய்து தருகிறார்கள். நானும் நான்கு ஐந்து கிலோ வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.

DSC01331 DSC01332

கிளம்பியவுடன், நண்பருக்கு தொலைபேசியில் அழைத்து கிளம்பியதாக கூறினேன். அவர், நீங்கள் ஊரை விட்டு செல்லும் வழி என்னுடைய வீட்டு வழிதான். என்றார். அவரிடம் இந்த இருட்டுக் கடை அல்வா பற்றி கூறினேன். சிரித்து கொண்டே, நீங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்றார். அவர் வீடு அந்த ஒரிஜினல் இருட்டுக்கடை அல்வா கடை அருகில் இருந்ததால் நானும் அங்கு சென்றேன். சென்றால், நண்பர் வரிசையில் நின்றுக் கொண்டு இருந்தார். அதனால் அவரிடம் ஒரு கிலோ வாங்க சொன்னேன். அவரும் வாங்கி தந்தார். ஒரு கிலோ அல்வா ருபாய் நூற்றி இருபது ஆகும். விலை சற்று அதிகமாக இருந்தாலும் சுவை அந்த அல்வாவைவிட பன்மடங்கு அதிகம் ஆக இருந்தது. நண்பருக்கு நன்றி கூறி, ஒரு கிலோ ஒரிஜினல் இருட்டுக் கடை அல்வா பிளஸ் ஐந்து கிலோ போலி இருட்டுக்கடை அல்வாவுடன் இன்று சென்னைக்கு வந்து சேர்ந்தேன்.

DSC01333 DSC01334

எனக்கு இதுவரையில் அல்வா கொடுத்த பல நண்பர்களுக்கு நான் இன்று அல்வா கொடுத்து விட்டேன். அதனால் முதன் முறையாக திருநெல்வேலி செல்லும் அன்பர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும். போலி இருடுக்கடையில் சென்று ஏமாந்து விடாதீர்கள்.

(அப்பாடா, ரொம்ப நாளா மக்களுக்கு பயனுள்ள ஒரு பதிவாவது போட எண்ணி இருந்தேன், இன்று செய்து விட்டேன். அதில் அனைவருக்கும் ஒரு மெஸ்சேஜ் வேறு சொல்லி விட்டேன்).

Related Posts Widget for Blogs by LinkWithin