சாப்பிடும் இடத்தில் சாதி வெறி = ஒரு கொலைவெறி ஹோட்டல்

வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மக்களே,

இன்றுதான் சென்னை திரும்பிய நானும் என்னுடைய தோழரும் மதிய உணவை குறிவைத்து பயணம் செய்தோம். அப்போது திடீரென்று நண்பருக்கு அபீசியல் போன் கால் ஒன்று வந்து விட நண்பர் சுமார் ஒன்றரை மணி நேரம் அதில் மூழ்கி விட்டார். அதனால் எங்கே செல்வது என்றில்லாமல் நானும் சீருந்தில் அங்கேயும் இங்கேயும் சென்றுக்கொண்டிருந்தேன். சற்றே கவலையான விஷயம் போலும், நண்பர் சிறிது சோகமாகி விட்டார். அதனால் அருகிலுள்ள ஏதாவது ஒரு ஹோட்டலில் சென்று சாப்பிடலாம் என்று பார்த்தேன். மைலாப்பூர் மேம்பாலம் அருகில் ஒரு ஹோட்டல் தென்பட்டது.

நானோ முழு சைவம், நண்பரோ லேக்டோ வெஜிடேரியன். அதாவது முட்டை மட்டும் சாப்பிடும் சைவக்காரர். அதனால் அருகில் இருந்த இந்த ஹோட்டலில் நுழைந்தோம். இரண்டு காரணங்கள்: 

1. கார் பார்க் பண்ண இடம் இருந்தது

2. குளிரூட்டப்பட்ட உணவகம், அதாங்க A/C.

 

Image(369)
Image(368)
Image(367)

ஆனால், அங்கு சென்றது எவ்வளவு பெரிய தவறு என்பது சற்று நேரத்தில் தான் தெரிய வந்தது. ஏ சி ரூமில் சென்றவுடனே தெரிந்தது அது ஒன்றும் சுத்தத்திற்கு பெயர் போன இடமில்லை என்பது. சிறிது நேரம் வெயிட் செய்தவுடன் ஒருவர் வந்து "இன்னா சார் வேணும்?" என்று கேட்டார். பின்னர் தான் தெரிந்தது அவர் அந்த ஹோட்டலில் வேலை செய்பவர் என்று. சரி, ஆளுக்கொரு மீல்ஸ் என்று ஆர்டர் செய்தோம், நண்பர் "முட்டை பிரியாணி" என்று மாற்ற்விட்டு, கூடவே "ஆம்லேட் ஒன்று, முட்டை பொரியல் ஒன்று, ஹாப் பாயில் ஒன்று" என்று அடுக்கிக் கொண்டே போனார். ஆனால் அந்த நபரோ, "சார் சைட் டிஷ் ஏதாவது ஆர்டர் பண்ணால் மட்டுமே இங்கு சாப்பிட முடியும், இல்லையெனில் வெளியே போங்கள்" என்று சொன்னார். மனம் நொந்த நாங்கள் " அதான் எவ்வளவு சைட் டிஷ் ஆர்டர் செய்துள்ளோமே" என்று கூறியும் அவர் கண்டுக்கொள்ளவில்லை. 

சரி முதலாளியிடம் புகார் செய்தால் சரியாகிவிடும் என்றெண்ணி கள்ளப்பெட்டியிடம் சென்றோம். சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் வெள்ளையும் சொள்ளையுமாக உட்கார்ந்துக்கொண்டு இருந்தார். அவரிடம் சென்று கூறியவுடன், அவரும் அதே பல்லவியை பாடினார். நான் வெஜிடேரியன் என்று சொன்னவுடன், அவர் "பரவாயில்லை, ஏதாவது சைட் டிஷ் ஆர்டர் செய்யுங்கள், பிறகு அங்கு A/C ஹாலில் சாப்பிடுங்கள்" என்று மறுபடியும் ஆரம்பித்தார். கடுப்பான நண்பர் "வாப்பா போகலாம், இப்படியே இருந்தால் வெளங்கிடும்" என்று என்னை அழைத்தார். உடனே அந்த வெள்ளை + சொள்ளை கடுப்பாகி விட்டு, "எங்க உங்கள மாதிரி பிராமினை எல்லாம் யார் உள்ளே விட்டது? இது எங்க ஆளுங்க ஹோட்டல்" என்று சாதி பிரச்சினையை தூண்டிவிட்டார். வெஜிடேரியன் என்றாலே அவன் பிராமின்தானா என்ன? என்ன கொடுமை சார் இது? என்று மனம் நொந்து வெளியே வந்தோம்.

மக்களே,

நீங்களே பதில் சொல்லுங்கள். அந்த ஹோட்டலின் வாயிலில் அசைவம் என்று இருந்தும் சாப்பிட சென்றது தவறு என்று நீங்கள் சொல்லலாம், ஆனால் பின்னர் நானும் நண்பரும் அருகில் இருந்த ராயப்பேட்டை முனுசாமி ஹோட்டலில் தான் சாப்பிட்டோம். நான் சைவமும், நண்பர் அதே ஆர்டரை ரிபீட் செய்தும் (முட்டை பிரியாணி" , கூடவே "ஆம்லேட் ஒன்று, முட்டை பொரியல் ஒன்று, ஹாப் பாயில் ஒன்று) சாப்பிட்டோம். அங்கே இந்த மாதிரி பிரச்சினை எல்லாம் எதுவும் நடக்கவில்லை. இங்கு யாருடைய தவறு? நமதா? அல்லது அந்த ஹோட்டலின் முதலாளியினுடயதா?

சாப்பிட்டு விட்டு வந்தவுடனே இந்த தெருப்பலகை தான் கண்ணில் பட்டது. அதுதான் உடனே புகைப்படம் எடுத்து விட்டேன். இடம், பொருள் எல்லாம் சரியாக வந்த படம் இது.

Image(360)

இப்படி மொக்கையாக இந்த நாள் அமைந்து விட்டதே என்று மவுன்ட் ரோட் சென்றால் அங்கு ஒரு நோட்டிஸ் போர்டை பார்த்து விட்டு இன்னமும் கடுப்பானேன். நீங்களே பாருங்கள் இந்த மொக்கையை.

Image(352)

இப்படி நம்மை ஒரு மொக்கை பாண்டி பிராமிணன் ஆக்கிவிடானே என்று வந்தால் இந்த போஸ்டர் கண்ணில் பட்டது. என்ன இன்று எல்லாமே விவகாரம்தான் என்று கூட தோன்றியது.

DSC01735

கவனிக்கவும் - இது ஒரு மொக்கை பதிவு. ஆகையால் கமெண்ட் போடலாம்.

Comments

2 Responses to "சாப்பிடும் இடத்தில் சாதி வெறி = ஒரு கொலைவெறி ஹோட்டல்"

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... May 11, 2010 at 5:58 AM

இவங்களை கொதிக்குற என்னை கொப்பறையில போடணும்

Gopi said... July 26, 2010 at 10:29 AM

Hi Venkat

I beleive, Lacto Vegetarianism means consumption of all Diary products (Milk, curd etc.,) excluding Eggs.

Consuming Eggs alone is called Ovo Vegetarianism.

Correct me if I'm wrong.

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin