வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்

வியாபார காந்தம் ஆலன் ஸ்டான்போர்ட் அமெரிக்க போலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த திரு ஆலன் ஸ்டான்போர்ட் அவர்கள் இன்று அமெரிக்க போலிஸ் அதிகாரிகளால் திடீரென்று கைது செய்யப் பட்டர். அமெரிக்க பங்கு வர்த்தக செக்கியூரிடிஸ் மற்றும் எக்ஸ்செஞ் துறையினர் "நினைத்தே பார்க்க இயலாத அளவிற்கு' ஒரு பெரிய குற்றத்தை இவர் செய்ததாக கூறியுள்ளனர்.
ஸ்டான்போர்ட் அவர்கள் அமெரிக்காவை சேர்ந்தவராக இருந்த போதிலும் அவர் வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் ஒன்றான அன்டீகா & பார்புடா குடிய்ரிமையையும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பெற்றார்.
இவர் யார்? சென்ற ஆண்டு உலகிலேயே ஒரு போட்டிக்காக அதிகபட்ச தொகையாகிய இருபது மில்லியன் டாலர்களை எப்படி இவர் அளித்தார்? (ஆம், சென்ற ஆண்டு ஸ்டான்போர்ட் சூப்பர்ஸ்டார்ஸ் அணி இங்கிலாந்து அணியை தோற்கடித்து இதனை வென்றது).
1932ல் தன்னுடைய தாத்தா துவக்கி வைத்த ரியல் எஸ்டேட் கம்பெனியை ஸ்டான்போர்ட் பொறுபேற்று கொண்டது என்னவோ 1980ல் தான். பின்னர் அந்த கம்பெனியை பல சாதனைகள் புரிந்து (நம்ம சத்யம் ராமலிங்கராஜு போலவா?) இன்று உலகின் முன்னணி கம்பெனிகளில் ஒன்றாக கொண்டு வந்துள்ள இவர் இன்று கைது செய்யாப் பட்டது உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கும் ஒரு தகவல் தான்.
வெஸ்ட் இண்டீஸ் அணியை சற்று நினைத்து பாருங்கள். உலகிலேயே வறுமையில் அடிபடும் அணியாகிய அணிக்கு ஒரு ஆபத்தாந்தவனாக வந்தவர் இந்த ஸ்டான்போர்ட். கடந்த வாரம் தான் தன்னுடைய அனைத்து கிரிகெட் சார்ந்த பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தார்.
அவருக்கு முன்பே தெரியுமோ என்னவோ?
what a tragedy.
உண்மையிலேயே இது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒரு துக்க செய்தி தான்.
அப்படி போடு அருவாள.